திமுகவின் பொய்யில் இருந்து எப்பொழுது எங்களுக்கு ‘விடியல்’ அரசே? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி ரூ.5 மற்றும் ரூ.10 குறைக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.அதன்படி, இந்த விலை குறைப்பானது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,கர்நாடக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை 7 ரூபாய் குறைத்திருப்பதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.அதேபோல,பல பகுதிகளிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.இதனால்,டீசல் விலை மீண்டும் 100 ரூபாய்க்கு கீழ் குறைந்தது.பெட்ரோல், டீசல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில்,இந்த விலை குறைப்பு வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி அரசு பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.10 குறைத்திருக்கிறார்கள்.ஆனால், உங்களுடைய பொய்யில் இருந்து எப்பொழுது எங்களுக்கு ‘விடியல்’ அரசே?, என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்ததும்,பெட்ரோலின் விலையை ரூ.5, டீசலின் விலையை ரூ. 4 விதம் குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்கள்.இந்த நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய அரசு பெட்ரோலுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.10 குறைத்திருக்கிறார்கள்.ஆனால், உங்களுடைய பொய்யில் இருந்து எப்பொழுது எங்களுக்கு ‘விடியல்’ அரசே?”,என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…