சட்டப்பேரவை எப்போது கூடுகிறது..? சற்று நேரத்தில் சபாநாயகர் அறிவிப்பு..!

Default Image
  • ஆளுநர் மாளிகையில் ஆளுநரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
  • ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கும் தேதியை சபாநாயகர் அப்பாவு மாலை 6:30 மணிக்கு அறிவிக்கிறார்.

சட்டப்பேரவை கூட்டம் விரைவில் தொடங்க உள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்ற ஆளுநருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கவே முதலமைச்சர் இன்று ஆளுநரை சந்திக்க சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநரை சந்திக்க சென்றுள்ள முதல்வருடன் அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர், உதவி அலுவலர்கள் சென்றுள்ளனர். கிண்டி ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆளுநர் உரையில் இடம்பெறக்கூடிய முக்கிய அம்சங்கள் குறித்தும் இந்த சந்திப்பின்போது ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. அதற்கேற்றார்போல கலைவாணர் அரங்கத்தில் அதற்கான வேலைகளும் நடந்து கொண்டு வருகிறது.

முதல்வர், ஆளுநருடன் சந்திப்பிற்கு பிறகு  தமிழக சட்டப்பேரவை எப்போது கூடுகிறது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கும் தேதியை சபாநாயகர் அப்பாவு மாலை 6:30 மணிக்கு அறிவிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்