பள்ளிகள் திறப்பது எப்போது? – இன்று வெளியாகும் முடிவு!

Published by
பாலா கலியமூர்த்தி

பள்ளிகள் திறப்பது குறித்து இன்று முடிவு வெளியாகும் நிலையில், இன்று முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்.

கொரோனா நோய்த்தொற்றால் கடந்த வருடம் பள்ளிகள் மூடப்பட்டது. தற்போது இந்தியா முழுவதும் நோய் பரவல் குறைந்து வரும் நிலையில், சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும், ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என கேள்வி எழுந்த வண்ணம் உள்ள நிலையில், அரசு பல்வேறு ஆலோசனை கூட்டம் நடத்தி, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் கருத்துக்களை கேட்டது. இதன்பின், செப்.1 முதல் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று ஊரடங்கு அறிவிப்பு வெளியிடும்போது அறிவித்தனர்.

இருப்பினும், தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து இன்று முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். அதன்படி, முதலமைச்சர் தலைமையில் இன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, தமிழகத்தில் பள்ளிகள் திறந்தால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் ஒரு நாளைக்கு 20 பேர் வீதம் சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைத்து வகுப்புகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொதுசுகாதாரத்துறை வெளியிட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

2 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

2 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

2 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

3 hours ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

4 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

6 hours ago