1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து பாடம் நடத்தாவிட்டால் உளவியல் ரீதியாக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், ஐ.சி.எம்.ஆர் மற்றும் உலக சுகாதார அமைப்பும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை துவங்குவதற்கான வழிகாட்டுதலையும் அறிவித்துள்ளது. ஏற்கனவே, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பாக பரிந்துரை செய்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
தற்பொழுதும் இன்று ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவத் துறை, பள்ளிக் கல்வித் துறை, வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…