முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் ‘மோடி மோடி’ முழக்கம்.! அமைதிப்படுத்திய பிரதமர் மோடி.!

Published by
மணிகண்டன்

பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இன்று இரு அரசு நிகழ்வுகளில் ஒரே மேடையில் கலந்துகொண்டனர். காலையில், திருச்சி – புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38வது பட்டமளிப்பு விழாவில் இருவரும் கலந்துகொண்டனர். உடன் ஆளுநர் ரவி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதற்கடுத்து, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய முனையத்தினை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, திருச்சி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது அரசியல் அல்ல… எங்கள் கோரிக்கை.! வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.!

விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய முனையம் திறந்து வைக்கப்பட்ட பின்னர், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பேசியதற்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச துவங்கினார். அந்த சமயம் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவினர் “மோடி மோடி” என கோஷமிட்டனர்.

இதனால் முதல்வர் பேசுவதற்கு சற்று இடைஞ்சலாக இருந்தது. அப்போது பிரதமர் மோடி கையசைத்தும் அவர்கள் கேட்கவில்லை. மோடி மோடி என்ற கோஷமிட்டு கொண்டிருக்கும் போதே முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்தார். அதன் பிறகு கூட்டத்தினர் அமைதியாகினர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசுகையில், சென்னை – பினாங், சென்னை – டோக்கியோ இடையே விமான சேவையை தொடங்க வேண்டும். சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கை விரைந்து வழங்க வேண்டும். சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை இயற்கை பேரிடராக அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியை விரைந்து விடுவிக்க வேண்டும் என்றும் நெடுஞ்சாலைத்துறையை மேம்படுத்துவதோடு சுங்கவரியை ரத்து செய்ய வழிவகை செய்ய வேண்டும் என அந்த கூட்டத்தில் பிரதமரிடம் கோரிக்கைகளை முன்வைத்தார்.

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

41 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

45 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

3 hours ago