பொன்னமராவதி வாட்ஸ் அப் வீடியோ விவகாரம் : செல்வகுமார், வசந்த் ஆகிய இருவர் கைது

Default Image

பொன்னமராவதி வாட்ஸ் அப் வீடியோ விவகாரம் தொடர்பாக பட்டுக்கோட்டையை சேர்ந்த செல்வகுமார், வசந்த் ஆகிய இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு சமூகத்தினர் பற்றிய அவதூறு வாட்ஸ்அப் ஆடியோவால் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கலவரம் ஏற்பட்டது. அவதூறு வாட்ஸ்அப் ஆடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடந்தது. போராட்டத்தின்போது பொன்னமராவதி காவல்நிலையம், போலீஸ் வாகனங்களும் தாக்கப்பட்டது.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.மேலும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.அதேபோல் வீடியோ வெளியிட்டவர்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவந்தது.

இந்நிலையில் வாட்ஸ் அப் வீடியோ விவகாரம் தொடர்பாக பட்டுக்கோட்டையை சேர்ந்த செல்வகுமார், வசந்த் ஆகிய இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்