முதலமைச்சர் பழனிசாமி எதைச் செய்தாலும் அதில் அவசர கோலம், அரைவேக்காட்டுத்தனம் – மு.க .ஸ்டாலின்

Published by
Venu

பழனிசாமி எதைச் செய்தாலும் அதில் அவசர கோலம்; அரைவேக்காட்டுத்தனம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தார் தமிழக முதல்வர் பழனிசாமி. மேலும் அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான சூரப்பா, அரியர் மாணவர்களுக்கு தேர்வை நடத்தி தேர்ச்சியை அறிவிக்க வேண்டும் என்பது தான் ஏஐசிடிஇ-ன் விதி என்றும் கூறியிருந்தார் .மேலும் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், தமிழக அரசிற்கு அர்யர் தேர்வு தொடர்பாக எந்த கடிதமும் ஏஐசிடிஇ மற்றும் யுஜிசி-யிடம் இருந்து வரவில்லை. அவ்வாறு ஒரு கடிதம் வந்திருந்தால் அதை சூரப்பா வெளியிட வேண்டும் என்றும் கூறினார்.

பின்  அரியர்ஸ் தேர்ச்சி விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, ஏஐசிடிஇ ஆகஸ்ட் 30-ஆம் தேதி அனுப்பிய கடிதம் வெளியாகியது.அந்த கடிதத்தில், அரியர்ஸ் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்தால் எந்த தொழில் நிறுவனமும், உயர்கல்வி நிறுவனங்களும் ஏற்காது.மேலும் உத்தரவை மீறினால் அண்ணா பல்கலைகழகத்தின் அங்கீகாரம் பறிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், அரியர்ஸ் தேர்வு இல்லாமல் தேர்ச்சி என்ற அறிவிப்பை ஏற்க இயலாது என அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சில், அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறது. முதலமைச்சர் திரு. பழனிசாமி எதைச் செய்தாலும் அதில் அவசர கோலம்; அரைவேக்காட்டுத்தனம்.

கல்வியாளர்களின் கருத்துகளைக் கேட்டறிந்துதான் திரு. பழனிசாமி அரசு செயல்படுகிறதா, அல்லது சுயநலமான காரணங்களுக்காக, கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்க, கபடநாடகம் ஆடுகிறதா? மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்ந்து விளையாடாமல், நியாயமான – தகுதியான வகையில் அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

INDvsBAN : கிரீன் பார்க்கில் தீவரமடையும் மழை! 2-ஆம் நாள் ஆட்டம் நடக்குமா?

INDvsBAN : கிரீன் பார்க்கில் தீவரமடையும் மழை! 2-ஆம் நாள் ஆட்டம் நடக்குமா?

கான்பூர் : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. மழையினால் மைதானத்தில் ஏற்பட்டிருந்த…

24 mins ago

“குடும்பத்துல கால் வச்ச முதல் ஆண் ஜெயம் ரவி தான்”…ஆர்த்தி அம்மா எமோஷனல்!!

சென்னை : நடிகர் ஜெயம் ரவி ஆசையாகக் காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாகக்…

26 mins ago

பாப்பம்மாள் பாட்டி மறைவு: பிரதமர் மோடி முதல் முதலவர் ஸ்டாலின் வரை தலைவர்கள் இரங்கல்!

கோயம்புத்தூர் : மேட்டுப்பாளையம் அருகே பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் (108) உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.…

33 mins ago

” உதயநிதியை துணை முதல்வராக்குங்கள்., நிர்வாகம் சிறப்பாக இருக்கும்.!” காங்கிரஸ் தலைவர் ‘பளீச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படுவார், தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் வரும் என்ற…

36 mins ago

வாரத்தின் இறுதி நாளில் சற்று குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ…

சென்னை : வார இறுதி நாளான இன்று சற்று இறக்கத்தில் சென்றுள்ளது தங்கம் விலை. அதன்படி, சவரனுக்கு ரூபாய் 40…

58 mins ago

லெபனான் மீது தீவிரமடையும் தாக்குதல்! போர் நிறுத்தத்திற்கு மறுப்பு தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்!

லெபனான் : இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டிற்கு இடையேயான போர் தொடங்கி ஒரு ஆண்டு நெருங்கி வருகிறது. கடந்த ஆண்டு…

1 hour ago