திமுக வெற்றி பெற்றால் அதிமுக என்ன செய்வார்கள், ரோட்ல கூட நிற்க முடியாது – டிடிவி தினகரன்

Published by
பாலா கலியமூர்த்தி

வரும் தேர்தலில் அமமுக இடம்பெறும் அணியே முதல் அணியாக இருக்கும் என்று அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை ஒரத்தநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தீய சக்தியான திமுகவை ஆட்சிக்கு வர விடக்கூடாது என்பதற்காக நாங்கள் போராடி வருகிறோம். எங்களுக்கு மடியில் கனமில்லை, தப்பித்தவறி திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக எங்கே இருக்கும், என்ன செய்வார்கள். நாங்கல்லாம் ரோட்ல கூட இருப்போம். ஆனால், அவர்கள் ரோட்ல கூட நிற்க முடியாது. எல்லாரும் எங்கே கிடைப்பிங்கனு தெரியும் என்று கூறியுள்ளார்.

மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் சசிகலா போட்டியிடுவது குறித்து சட்டரீதியாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதில் வெற்றி கிடைத்தால் கண்டிப்பாக அவர் போட்டியிடுவார் எனவும் தெரிவித்துள்ளார். சசிகலா போட்டியிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நான் இருக்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அம்மாவின் தொண்டர்கள் இருப்பது தான் தமிழகத்தில் முதல் அணியாக இருக்கும். வரும் தேர்தலில் அமமுக இடம்பெறும் அணியே முதல் அணி என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் அம்மாவின் உண்மையான ஆட்சி வரவேண்டும் என்றால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும். அதன் வெளிப்பாடுதான் 4 ஆண்டு காலம் பழிச்சொல்லுக்கு பின்னர் வந்த சசிகலா அவர்களுக்கு அளித்தே வரவேற்பே காரணம். தற்போது மருத்துவர்கள் சசிகலாவை ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். ஓய்வு முடிந்த பிறகு சசிகலா வருவார். நாங்கள் நிச்சியம் அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுப்போம் என கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

3 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

11 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

23 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago