தமிழக அரசு வேல் யாத்திரைக்கு மறுப்பு தெரிவித்ததற்கான காரணம் என்ன?

Published by
லீனா

தமிழக அரசு வேல் யாத்திரைக்கு மறுப்பு தெரிவித்ததற்கான காரணம்.

திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர்-6ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, சென்னையை சேர்ந்த பத்திரிக்கையாளர்களான, பாலமுருகன் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் இந்த யாத்திரைக்கு தடை விதிக்க கோரி தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அவர்கள் அளித்துள்ள மனுவில், கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி, மொகரம் போன்ற பண்டிகைகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஒரு மாத காலமளவும், வேல் யாத்திரை நடத்தப்படும் பட்சத்தில், 3,000 – 5,000 பேர் கூட இருப்பதால், கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்து பெண்கள் குறித்து திருமாவளவன் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவினர் முன்னெடுத்த போராட்டங்களில் சட்ட ஒழுங்கு போராட்டக்களை சுட்டி காட்டி, அதுபோன்ற சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்ட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த யாத்திரைக்கு அனுமதி வாழங்கப்பட்டால், கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு, மருத்துவர்கள் மற்றும் பல துறை ஊழியர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகும் என்றும், யாத்திரை முடியும் நாளான டிச.6ம் தேதி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால், இதன் காரணமாகவும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில், இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையிடப்பட்ட நிலையில், இதனை ஏற்று செந்தில் குமாரின் மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கொரோனா 2, 3-வது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால், பராஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என உயர்நீதிமன்றத்தில்  தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த யாத்திரையால், மத கலவரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

”கொள்ளையடித்த பணத்தை வண்டி வண்டியா கொட்ட போறாங்க” – தவெக தலைவர் விஜய்.!”கொள்ளையடித்த பணத்தை வண்டி வண்டியா கொட்ட போறாங்க” – தவெக தலைவர் விஜய்.!

”கொள்ளையடித்த பணத்தை வண்டி வண்டியா கொட்ட போறாங்க” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று…

1 hour ago
தாய்லாந்தில் இந்தியரை தாக்கிய புலி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ.!தாய்லாந்தில் இந்தியரை தாக்கிய புலி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ.!

தாய்லாந்தில் இந்தியரை தாக்கிய புலி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ.!

பாங்காக் : தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில் ஒரு இந்திய மனிதனை புலி தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…

1 hour ago
த.வெ.க கல்வி விருது விழா: மணக்க மணக்க தயாராகும்தடபுடல் விருந்து..!த.வெ.க கல்வி விருது விழா: மணக்க மணக்க தயாராகும்தடபுடல் விருந்து..!

த.வெ.க கல்வி விருது விழா: மணக்க மணக்க தயாராகும்தடபுடல் விருந்து..!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற உள்ளது. இந்த…

2 hours ago
4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26ம் கல்வி ஆண்டில் 4 புதிய அரசு கலை,…

2 hours ago
ஐபிஎல் எலிமினேட்டர்: இன்று மும்பை – குஜராத் அணிகள் மோதல்.! தோற்றால் வெளியேற வேண்டியதுதான்.!ஐபிஎல் எலிமினேட்டர்: இன்று மும்பை – குஜராத் அணிகள் மோதல்.! தோற்றால் வெளியேற வேண்டியதுதான்.!

ஐபிஎல் எலிமினேட்டர்: இன்று மும்பை – குஜராத் அணிகள் மோதல்.! தோற்றால் வெளியேற வேண்டியதுதான்.!

சண்டிகர் : இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத்தும், மும்பையும் மோத உள்ளன. இந்தப் போட்டி முல்லன்பூரில் உள்ள மகாராஜா…

2 hours ago
ராமதாஸ் கடும் விமர்சனம்: கட்சி நிர்வாகிகளோடு அன்புமணி இன்று ஆலோசனை..!ராமதாஸ் கடும் விமர்சனம்: கட்சி நிர்வாகிகளோடு அன்புமணி இன்று ஆலோசனை..!

ராமதாஸ் கடும் விமர்சனம்: கட்சி நிர்வாகிகளோடு அன்புமணி இன்று ஆலோசனை..!

சென்னை : பாமகவில் தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே இளைஞர் அணி செயலாளர் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட மோதல்…

3 hours ago