நெல்லை கண்ணனை கைது செய்ய காரணம் என்ன ? முதலமைச்சர் விளக்கம்

Default Image
  • பிரதமர் மோடியையும், மத்திய அமைச்சர் அமித்சாவையும் ஒருமையில் பேசியதாக நெல்லை கண்ணன்  கைது செய்யப்பட்டார்.
  • நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று எந்த உள்நோக்கமும் அரசுக்கு இல்லை என்று முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். 

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நெல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற நெல்லை கண்ணன் பேசுகையில், பிரதமர் மோடியையும், மத்திய அமைச்சர் அமித்சாவையும் ஒருமையில் பேசியதாக அவர் மீது பாஜகவினர் போலீசில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில், பெரம்பலூரில் தனியார் விடுதியில் இருந்த நெல்லை கண்ணனை கைது செய்தனர். கைது செய்யப்பட்டு திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நெல்லை கண்ணன் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற சட்டசபையில், காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ்   நெல்லை கண்ணன்  குறித்து கேள்வி எழுப்பினர்.அவர் கூறுகையில் .நெல்லை கண்ணன் என்ன தவறு செய்தார். அவரை கைது செய்தது ஏன் ? என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் பழனிசாமி,  நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று எந்த உள்நோக்கமும் அரசுக்கு இல்லை.சட்டரீதியாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live 20032025
TVK meeting in Chennai
Vithya Rani - NTK
MK Stalin - EPS
ICC Champions - Indian cricket team
ed - chennai high court
TN CM MK Stalin say about Murders in Tamilnadu