அரியர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த என்ன தடை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் போடப்பட்ட ஊரடங்கால் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. எனவே தமிழக அரசு அரியார் தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரியர் தேர்வுகளை ரத்து செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மானிய குழுவின் செயலாளர் நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என கூறியதுடன், நீதிமன்றத்தை கேலிக்குத்தக்க வேண்டாம் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் பின் அரியர் தேர்வுகளை ரத்து செய்வதில் தங்களுக்கு உடன்பாடில்லை என பல்கலைக்கழக மானிய குழுவினர் தெரிவித்துள்ளனர். இறுதிபருவ தேர்வை ஆன்லைனில் நடத்துவது போல அரியர் தேர்வை நடத்துவதற்கு என்ன தடை என கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக கூடுதல் பதில் மனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, நவம்பர் 25 ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
டெல்லி : இன்று இந்திய ரயில்வே துறையின் சார்பாக காலியாக உள்ள 32,438 RRB லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்வு…
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…