என் தங்கச்சி கிட்டயே WhatsApp-ல சாட் பண்றியா.? கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த கதி.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • சேலம் மாவட்டத்தில் ஹரிஹரன் என்ற இளைஞர், அப்பகுதியே சேர்ந்த மாணவியிடம் வாட்ஸ்அப்பில் பேசுவதை கண்டித்த மாணவியின் அண்ணன் சச்சின்.
  • ஹரிஹரனின் உறவினரான முரளிதரன் என்பவர், சச்சினிடம் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது மாணவியின் அண்ணன் அவரது வண்டி சாவியில் வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்ட மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்ற இளைஞர், சேலம் அரசு கலைக் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவியிடம் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு ஏற்பட்டு பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த மாணவியின் பெற்றோர், ஹரிகரன் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். ஹரிகரன் பெற்றோர் அவரை கண்டித்து, தற்போது இருவரும் பேசுவதில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்நிலையில் மாணவியின் அண்ணன் சச்சின் நேற்றிரவு மது அருந்திவிட்டு ஹரிஹரனை அருகிலுள்ள ஏரி பகுதிக்கு அழைத்து சென்று மிரட்டியுள்ளார். மேலும் தனது தங்கையிடம் பேசுவியா என்று தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதைப்பற்றி ஹரிஹரன் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த மாணவரின் உறவினரான முரளிதரன் என்பவர், சச்சினிடம் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது மாணவியின் அண்ணன் சச்சின் அவரது வண்டி சாவியில் வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில், ஹரிஹரன் அவரது உறவினர் முரளிதரன் ஆகிய இருவருக்கும் தலை, முகம், உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்ட உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

INDvsPAK: நீயா? நானா? வெற்றி வாகை யாருக்கு! டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்.!!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…

2 hours ago

IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…

3 hours ago

ஸ்பெயின் கார் ரேசில் மீண்டும் விபத்து… அஜித்-ன் கார் விபத்து எப்படி நடந்தது?

ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார்…

4 hours ago

தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!

தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி…

5 hours ago

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!

சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…

5 hours ago

AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!

லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…

17 hours ago