என் தங்கச்சி கிட்டயே WhatsApp-ல சாட் பண்றியா.? கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த கதி.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • சேலம் மாவட்டத்தில் ஹரிஹரன் என்ற இளைஞர், அப்பகுதியே சேர்ந்த மாணவியிடம் வாட்ஸ்அப்பில் பேசுவதை கண்டித்த மாணவியின் அண்ணன் சச்சின்.
  • ஹரிஹரனின் உறவினரான முரளிதரன் என்பவர், சச்சினிடம் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது மாணவியின் அண்ணன் அவரது வண்டி சாவியில் வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்ட மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்ற இளைஞர், சேலம் அரசு கலைக் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவியிடம் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு ஏற்பட்டு பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த மாணவியின் பெற்றோர், ஹரிகரன் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். ஹரிகரன் பெற்றோர் அவரை கண்டித்து, தற்போது இருவரும் பேசுவதில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்நிலையில் மாணவியின் அண்ணன் சச்சின் நேற்றிரவு மது அருந்திவிட்டு ஹரிஹரனை அருகிலுள்ள ஏரி பகுதிக்கு அழைத்து சென்று மிரட்டியுள்ளார். மேலும் தனது தங்கையிடம் பேசுவியா என்று தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதைப்பற்றி ஹரிஹரன் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த மாணவரின் உறவினரான முரளிதரன் என்பவர், சச்சினிடம் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது மாணவியின் அண்ணன் சச்சின் அவரது வண்டி சாவியில் வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில், ஹரிஹரன் அவரது உறவினர் முரளிதரன் ஆகிய இருவருக்கும் தலை, முகம், உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்ட உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago