நவராத்திரிக்கு ஒன்பது நிற உடையில் வரவேண்டுமென யூனியன் பாங்க் ஆப் இந்தியா பொது மேலாளர் சுற்றறிக்கைக்கு சு.வெங்கடேசன் கண்டனம்.
யூனியன் பாங்க் ஆப் இந்தியா பொது மேலாளர் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒன்பது நிற உடைகளில் வர வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பி இருப்பதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நவராத்திரிக்கு ஒன்பது நிற உடையில் வா! உள்ளாவிட்டால் தண்டம் கட்டு. இது என்ன அரசு வங்கியா? இல்லை அதிகாரி வீட்டின் பூஜை அறையா? என கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், யூனியன் பாங்க் ஆப் இந்தியா அலுவலகத்தில் உள்ள பொது மேலாளர் ஏ.ஆர் ராகவேந்திரா என்பவர் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒன்பது நிற உடைகளில் வர வேண்டுமென ஒரு சுற்றறிக்கையை கடந்த 1ம் தேதி வெளியிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் உடை கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டுமாம், விடுமுறை நாளாக இருந்தாலும், யார் இவருக்கு அதிகாரம் தந்தது. ஊழியரின் விதி முறைகளில் எந்த சரத்தின் கீழ் இந்த சுற்றறிக்கையை அவர் விடுத்துள்ளார்?.
நவராத்திரியை நம்பிக்கை உள்ளவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். அது அவர்களின் விருப்பம். தனிப்பட்ட உரிமை. ஆனால், எல்லாரும் கொண்டாடியாக வேண்டும், இன்ன நிறத்தில் உடை உடுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது அதிகார மீறல்,அடுத்தவரின் உரிமைகளில் தலையிடுகிற அத்து மீறல். நிதி அமைச்சகம், யூனியன் வங்கி சேர்மன் உடனடியாக இதில் தலையிட வேண்டும். உடனடியாக சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்றும் சம்மந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…