நாங்க என்ன கருவேப்பிலையா, கொத்தமல்லியா? விட மாட்டோம் – ராதிகா சரத்குமார் பேச்சு

Published by
பாலா கலியமூர்த்தி

எனக்குக் கடவுள் சரத்குமார்தான் அவர் கட்டளையிட்டால் நிச்சயம் இந்த தேர்தலில் போட்டியிடுவேன் என ராதிகா சரத்குமார் உறுதி அளித்துள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6வது பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் சரத் குமாரை தவிர வேறு யாரும் போட்டியிடாததால் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக மீண்டும் போட்டியின்றி சரத் குமார் தேர்வானார்.

இதனைத்தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராதிகா சரத்குமார், கட்சி தலைவர் சரத்குமாருக்கு பயம் கிடையாது. ஒரே ஒரு விஷயத்துக்கு மட்டும் தான் கட்டுபடுவார். அன்பு ஒன்றுக்குத்தான் சரத்குமார் தலைவணங்குவார் என கூறியுள்ளார். அந்த அன்பு இருந்த எது வேண்டுமானாலும் சாதிக்கலாம், அது இந்த சமத்துவ சொந்தங்கள், நீங்கள் காட்டுகின்ற அன்பை வைத்து சாதிப்போம் என்ற நம்பிக்கையோடு சரத்குமார் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

முக்கிய முடிவுகளை கட்சியின் தலைவர் சரத்குமார் விரைவில் அறிவிப்பார். அதனை மனதில் வைத்துக்கொண்டு இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் தேர்தலாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். நாங்க என்ன கருவேப்பிலையா, கொத்தமல்லியா? விட மாட்டோம், பயம் எங்களுக்கு கிடையாது, அன்பு ஒன்று மட்டும் தான் எங்களிடம் உள்ளது என அதிமுகவை குறி வைத்து பேசியுள்ளார்.

தலைவர் கட்டளையிட்டால் நான் கண்டிப்பாக இந்த தேர்தலில் போட்டியிடுவேன் என்று உறுதியாக கூற கடமைப்பட்டிருக்கிறேன். நிறைய பேர் நான் கோவில்பட்டி அல்லது வேளச்சேரியில் நிற்க வேண்டும் என கூறியிருக்கிறார்கள். ஆனால், கடவுள் என்ன நினைக்கிறார் என்று எனக்கு தெரியாது. கடவுள் என்று சொல்லுவது சரத்குமார் எனக்கும் கடவுள் தானே என்று கூறியுள்ளார். அவருக்காக கண்டிப்பாக இந்த தேர்தலில் நிற்பேன் என்றும் எங்களது இலக்கு வெற்றி என்றும் உறுதி அளித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொது செயலாளர் விவேகானந்தா, ராதிகா சரத்குமார் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனிடையேகடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி விலகியது. இதையடுத்துமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து, சரத்குமார் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

1 hour ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

3 hours ago