பஸ் பயணம் தொடர்பாக பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பராவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் சுவாமி, ஊரடங்கு முடிந்த பின்னர், அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்தும், ஓட்டுனர், நடத்துனர், பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் காணொலி காட்சி மூலம் நேற்று விசாரித்தனர். இந்த விசாரணையில், தமிழக அரசு ஏற்கனவே பொது போக்குவரத்து குறித்து அறிவிப்புகளை வெளியிட்டிருந்த போதிலும், ஊரடங்கு முடிவுக்கு வந்தபிறகு, பஸ் பயணம் தொடர்பாக என்னென்ன பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்துள்ளது? என்பது குறித்து போக்குவரத்து துறை செயலாளர் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு, ஜூன் -1ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…