மார்ச் 2022 வரை மொத்தம் 5,781 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என தமிழக சட்டப்பேரவையில் தகவல்.
தமிழக சட்டப்பேரவையில் சமூக நலன் & மகளிர் உரிமைத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பை, சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை அமைச்சர் கீதா ஜீவன் வாசித்தார். அதில், அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளும் திட்டம் மூலம் சுமார் 91.85 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2021-22ம் ஆண்டில் 267 குழந்தைகள் தத்து வழங்கப்பட்டுள்ளனர். பெண் சிசுக்கொலை எனும் தீய பழக்கத்தை தடுக்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மார்ச் 2022 வரை மொத்தம் 5,781 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், மூத்த குடிமக்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. 2031ம் ஆண்டில் மாநிலத்திலுள்ள மூத்த குடிமக்களின் விழுக்காடு 18.20% ஆக உயரும்போது எண்ணிக்கை 1.50 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. இதையடுத்து, பாதுகாப்புக்கான அரசின் உதவி எண்கள் என்னென்ன? என்பது குறித்தும் அறிவிக்கப்பட்டது. அதாவது, குழந்தைகளுக்கான உதவி எண் – 1098, மகளிருக்கான உதவி எண் – 181, முதியோருக்கான உதவி எண் – 14567, இணையதள குற்றத் தடுப்புக்கான உதவி எண் – 1930 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என விளக்க குறிப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது.
பாங்காக் : மியான்மரை தொடர்ந்து தாய்லாந்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மியான்மரில் இன்று காலை 11:50 மணியளவில் முதல் சக்தி…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…
சென்னை : இன்று (மார்ச் 28) தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா மஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் கட்சித்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா மஹாலில் நடைபெற்று வருகிறது. இதில்…