சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி சந்தித்துள்ளார்.
மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.
இவர் இன்று சென்னை விமான நிலையம் வந்ததும், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மா.சுப்ரமணியன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க புறப்பட்டார்.
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, மம்தா பேனர்ஜி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, திமுக பொருளாளர் டிஆர்.பாலு, துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. இருந்தாலும், இரு அரசியல் பிரமுகர்கள் சந்திக்கும் போது அரசியல் பற்றி பேசுவது இயல்பு எனவும் மம்தா இந்த சந்திப்பு குறித்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்ட்டணி குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும் எனவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…