வேலூரை சேர்ந்த கணவன், மனைவி சென்னை கடற்கரையில் சாலையில் திருமண நாள் கொண்டாட்டத்தின் போது, எதிர்பாராத விதமாக ராட்சத அலை அடித்துள்ளது. அதில் சிக்கிய மனைவி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
வேலூர் காகிதப்பட்டறை பகுதியை சேர்ந்த வினி சைலா என்பவர், அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் விக்னேஷ். இவர்கள் 2-ம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடுவதற்காக நேற்று சென்னை வந்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கிய அவர்கள், நள்ளிரவு 12 மணி அளவில் பாலவாக்கம் கடற்கரைக்கு சென்று தங்கள் திருமண நாளை கொண்டாடியுள்ளனர். பின்னர் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி வினி சைலா கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து பல இடங்களில் தேடியும் மனைவி கிடைக்காததை அடுத்து, கணவர் கணேஷ் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இந்நிலையில், இன்று காலை வினி சைலாவின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவர் விக்னேஷ் இடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கடற்கரையில் ஏற்பட்ட இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…