கடற்கரையில் திருமண நாள் கொண்டாட்டம்.! திரும்பி பார்த்தால் மனைவியை காணும்.! விடிந்ததும் நேர்ந்த சோகம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

வேலூரை சேர்ந்த கணவன், மனைவி சென்னை கடற்கரையில் சாலையில் திருமண நாள் கொண்டாட்டத்தின் போது, எதிர்பாராத விதமாக ராட்சத அலை அடித்துள்ளது. அதில் சிக்கிய மனைவி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

வேலூர் காகிதப்பட்டறை பகுதியை சேர்ந்த வினி சைலா என்பவர், அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் விக்னேஷ். இவர்கள் 2-ம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடுவதற்காக நேற்று சென்னை வந்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கிய அவர்கள், நள்ளிரவு 12 மணி அளவில் பாலவாக்கம் கடற்கரைக்கு சென்று தங்கள் திருமண நாளை கொண்டாடியுள்ளனர். பின்னர் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி வினி சைலா கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து பல இடங்களில் தேடியும் மனைவி கிடைக்காததை அடுத்து, கணவர் கணேஷ் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இந்நிலையில், இன்று காலை வினி சைலாவின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவர் விக்னேஷ் இடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கடற்கரையில் ஏற்பட்ட இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…

1 minute ago

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

2 hours ago

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

4 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

4 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

5 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

5 hours ago