தேசத்தை முன்னிறுத்தி தேச நலனுக்காய் உழைப்போம் – பா.ஜ.க தலைவர்

Published by
Surya

தேசத்தை முன்னிறுத்தி, தேச நலனுக்காய் உழைப்போம் என்று இந்த சுதந்திர தினத்தன்று வாழ்த்து தெரிவித்த பா.ஜ.க தலைவர் முருகன்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தனது 74 ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. அடிமைப்பட்டு கிடந்த இந்திய மக்களுக்கு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைத்த நாள் இன்று.

இந்நிலையில் பா.ஜ.க தலைவர் முருகன் தனது ட்வீட்டர் பக்கத்தில்  74 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார்.

பாரதப் பிரதமர் தலைமையில் புதிய பாரதத்தை உருவாக்குவோம்

மக்களின் அடிப்படை வசதி தொழில் வளர்ச்சி ஏற்றுமதி வளர்ச்சி சிறு குறு தொழில்களில் புதிய வேகம், விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி தவின் கட்டமைப்பு திட்டங்கள், நேர்மையான வெளிப்படையான நிர்வாகம் என அனைத்து துறைகளிலும் இலக்கை நிர்ணயித்து, தற்சார்பு இந்தியாவை பாரதப் பிரதமர் அவர்கள் உருவாகி வருகிறார்.

இந்தியாவின் நீண்ட நெடுங்காலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகளான காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து குடியுரிமை திருத்தச் சட்டம், அயோத்தி ராமர் கோவில் கட்டுவது என பல்வேறு பிரச்சனைகள் சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டு, எழுச்சி மிக்க இந்தியா உருவெடுத்துள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி ரூ 500 லட்சம் கோடியாக உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா உலகிற்கு வழிகாட்டியாய் திகழ்கிறது.

நல்ல அரசன் இல்லாத நாடு எவ்வளவு வளம் இருந்தாலும், அதனால் பயனடையாது அனைவரையும் அரவணைத்து, அனைவரின் வளர்ச்சிக்கும் அயராது பாடுபடும் நமது பிரதமர் அவர்களின் அயராத உழைப்பில் தேசத்தினை உயர்த்திட நாமும் தேசத்தை முன்னிறுத்தி, தேச நலனுக்காய் உழைப்போம் என்று இந்த சுதந்திர தினத்தன்று உறுதி கொள்வோம்.

தங்கள் உடல் பொருள் ஆவி என அனைத்தும் அர்ப்பணித்து, நமக்கெல்லாம் சுதந்திரம் பெற்றுத் தந்த ஒன்றுபட்ட பாரதத்தை உருவாக்கிய தலைவர்களையும், தியாகிகளையும் நினைவு கூறி அனைவருக்கும் 74வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

பாகிஸ்தான் ரயில் தாக்குதல்! 100 ராணுவ வீரர்கள் கொலை? BLA-வின் அடுத்த எச்சரிக்கை!

பாகிஸ்தான் ரயில் தாக்குதல்! 100 ராணுவ வீரர்கள் கொலை? BLA-வின் அடுத்த எச்சரிக்கை!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 9 பெட்டிகளில் சுமார்…

13 minutes ago

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

10 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

11 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

12 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

13 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

14 hours ago