அனைவரும் முகக்கவசம் அணிந்தபடி செல்ஃபி புகைப்படம் எடுத்து அதனை டிபியாக அனைத்து சமூக வலைதளங்கள பக்கத்திலும் பதிவிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்போது முகக்கவசம் கட்டாயம் என கூறப்படுகிறது.
இந்த கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழக மக்களும் தே.மு.தி.க. நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.’ எனவும்,
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைவரும் முகக்கவசம் அணிந்தபடி செல்ஃபி புகைப்படம் எடுத்து அதனை டிபியாக (ப்ரொஃபைல் போட்டோ) அனைத்து சமூக வலைதளங்கள பக்கத்திலும் பதிவிட்டு முக கவத்தின் அவசியத்தை மக்களுக்கு வலியுறுத்த வேண்டும். மேலும், இந்த விழிப்புணர்வு புகைப்படத்தை மே மாதம் 3-ந் தேதி வரை வைத்திருக்க வேண்டும்’ என விஜயகாந்த் தனது அறிக்கை மூலம் மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…