2021 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை இன்றே துவங்குவோம்- அதிமுக தலைமை அறிவிப்பு

Default Image

தேர்தலுக்கான பணிகளை இன்றே துவங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் அக்கட்சியை தொடங்கிய நாள் அக்டோபர் 17ஆம் தேதி ஆகும்.அதிமுக தொடங்கி  48 ஆண்டுகள் நிறைவடைகிறது .49-வது  ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில்,அதிமுகவின் பொன்விழா ஆண்டின் போதும், கழகமே ஆட்சியில் இருக்க சபதம் ஏற்போம்.”பொன்விழா ஆண்டிலும் அ.தி.மு.க ஆட்சியை பிடிக்கும்- சாதனை படைப்போம்” .2021 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை இன்றே துவங்க வேண்டும்.அ.தி.மு.க-வுக்காக உழைத்த, தியாகம் செய்தவர்களுக்கு நன்றி”  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்