மீண்டும் அஇஅதிமுக ஆட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவோம் என எம்ஜிஆர் பிறந்தநாளில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பலர் வரலாற்றில் இடம்பெறுகிறார்கள். ஒரு சிலர்தான் வரலாறாகவே வாழ்கிறார்கள். அந்த ஒரு சிலரில் ஒருவரான மறைந்த மாமனிதர், வாரி வழங்கி வாழ்நாளெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மகிழும் வண்ணம் ஆட்சி நடத்தியவர், சாமானியனின் கருத்திற்கு மதிப்பளித்தவர், சாமானிய மக்களுக்காக சட்டங்களை இயற்றியவர், திட்டங்களைத் தீட்டியவர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர், மனிதப் புனிதர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், ‘பாரத ரத்னா’, மாண்புமிகு டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வழியில், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் பயணித்து மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை தமிழ்நாட்டில் விரைவில் ஏற்படுத்துவோம் என இந்த நன்னாளில் உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…