ஜெய்பீம் போன்ற படங்களுக்கு எதிர்ப்புகள் வந்தால் போராட தயங்க மாட்டோம் – கே.பாலகிருஷ்ணன்

Default Image

ஜெய்பீம் போன்ற படங்களுக்கு எதிர்ப்புகள் வந்தால் போராட தயங்க மாட்டோம் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. இப்படம் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றாலும், சில தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்நிலையில் ஜெய் பீம் படக்குழுவினருக்கு, சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், ஜெய்பீம் திரைப்படம் உலகத்தை திரும்பி பார்க்க வைத்ததாக பாராட்டினார். இதுபோன்ற படங்களுக்கு வரும்காலத்தில் எதிர்ப்புகள் வந்தால், மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சி போராட தயங்காது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்