சூழலுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை திமுக ஆட்சியில் அனுமதிக்க மாட்டோம் – மு.க.ஸ்டாலின்.

Published by
Venu
சூழலுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை திமுக ஆட்சியில் அனுமதிக்க மாட்டோம்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை தொடர்பாக, திமுக  சார்பில்  காணொலிக் கருத்தரங்கு நடைபெற்றது.இதில் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் பேசுகையில்,இந்தியாவின் சுற்றுச்சூழல் மட்டுமல்ல; உலகத்தின் சுற்றுச்சூழலும் சுகாதாரமும் கெட்டுப் போய்க்கிடக்கும் காலக்கட்டத்தில், இத்தகைய ஒரு கருத்தரங்கை நாம் நடத்திக் கொண்டு இருக்கிறோம்.சில வாரங்களுக்கு முன்னால் கல்வி உரிமையைக் காப்பாற்றுவதற்காக இப்படி ஒரு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் நாட்டில் ஏற்கனவே இருக்கும் கல்வியைச் சிதைக்கும் காரியத்தைச் செய்ய மத்திய அரசு அந்தக் கொள்கையைக் கொண்டுவருவதைக் கண்டிக்கும் வகையில், அந்தக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்றைய கருத்தரங்கத்தின் நோக்கம், சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்காகக் கொண்டுவரப்படும் சட்டம், சூழலைக் கெடுப்பதாக அமைந்திருப்பதை மத்திய அரசுக்கு எடுத்துக் காட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா என்ற நோய் உலகம் முழுவதும் பரவி உள்ளது. இதன் காரணமாக அனைத்து நாடுகளின் மனதிலும் மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கைக்கு எதிரான குரலை, மக்களின் குரலாக ஒலிப்பார்கள் என்ற உறுதியை நான் அளிக்கிறேன் என்று பேசினார்.
Published by
Venu

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

11 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

19 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago