சீமானின் பேச்சை கேட்டு ரசிப்போம் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

Default Image

சீமானின் பேச்சை கேட்டு ரசிப்போம், அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.டி.ராகவன் பெண்ணிடம் ஆபாசமாக பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருவரின் அனுமதி படம் பிடிப்பது குற்றம், வீடியோ எடுத்தவரை கைது செய்திருக்க வேண்டும்.

உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி.ராகவன் செய்துவிட்டார் என கூறினார். கே.டி.ராகவனை ஆதரித்து பேசியதற்கு சீமான் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கே.டி. ராகவனுக்கு சீமான் ஏன் ஆதரிக்கிறார் என செய்தியாளர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அண்ணாமலை சீமான் பேச்சை சீரியஸாக்க வேண்டாம்.

சீமானின் பேச்சை கேட்டு ரசிப்போம், அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. சீமான் எதற்கு எங்களை ஆதரிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்