ஹத்ராஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் – கே.எஸ். அழகிரி!

Published by
Rebekal

ஹத்ராஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் எனும் கிராமத்தில் 19 வயதான பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் நான்கு உயர்ஜாதி ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பல்வேறு இடங்களிலும் பெரும் கண்டனத்தை பெற்ற நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் அப்பெண்ணின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூற உத்திரப்பிரதேசம் சென்றனர். அவர்களை உள்ளே செல்ல விடமால் காவலர்கள் தடுத்ததால், ராகுல்காந்தி கீழே தள்ளப்பட்டார் என செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகிய கே எஸ் அழகிரி அவர்கள் ஏற்கனவே 11 தலித்துகள் 1977 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட போது அவர்களுக்கு ஆறுதல் கூற பல தடைகளை கடந்து யானை மீது அமர்ந்து இந்திரா காந்தி அவர்கள் சென்றதும் தற்பொழுது நினைவுக்கு வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய பாரம்பரியத்தில் வந்தவர்கள் ராகுலும், பிரியாவும் என்பதை நிரூபித்து உள்ளார்கள் எனவும் அந்த அப்பாவிகளுக்கு நீதி கிடைக்கும் வரையிலும், போராட்டம் வெற்றிபெறும் வரைக்கும் இணைந்து போராடுவோம் என காங்கிரஸ் கட்சியினருக்கு கே எஸ் அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம்! அதிமுக புறக்கணிப்பு…

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம்! அதிமுக புறக்கணிப்பு…

சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…

24 minutes ago

தோனியின் ஆவேசம் வீண்.. 4வது முறையாக தொடர் தோல்வி.! சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி..,

பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…

54 minutes ago

காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்.! யார் இந்த குமரி அனந்தன்?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…

2 hours ago

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

10 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

10 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

12 hours ago