விளிம்புநிலை மக்களுக்காக நான் இருக்கிறேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் ட்வீட்.
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புக்கு சென்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் ஆவடி அருகே நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு சென்ற முதலமைச்சர், மாணவிகளுடன் கலந்துரையாடினர். அப்போது, நரிக்குறவ மாணவி இல்லத்தில் முதலமைச்சர் இட்லி, வடை உள்ளிட்ட காலை சிற்றுண்டி அருந்தினார். மேலும் நரிக்குறவ மாணவிக்கு இட்லி ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.
இந்த நிலையில், தற்போது இதுதொடர்பாக முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எங்க வீட்டுக்கு வந்து சாப்பிடுங்க என்ற தங்கை திவ்யாவின் அழைப்பை ஏற்று, அவரது வீட்டிற்குச் சென்று சாப்பிட்டேன். விளிம்புநிலை மக்களுக்காக நான் இருக்கிறேன், நமது இயக்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையை அவர்களுக்கும் உள்ளது. பாசத்தோடு பரிமாற தமிழ்நாட்டையே உறவாகப் பெற்றுள்ள மகிழ்வை எனக்கும் தருகிறது. சமத்துவமும் சமூகநீதியும் நம் பாதை. இந்த திராவிட மாடலில் அன்பை விதைப்போம்! நாம் அனைவரும் சமம் என உரக்க முழங்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…