கருவறை இருட்டு போல இருப்பாய் என நினைத்தோம்! கல்லறை இருட்டாய் மாறுமென நினைக்கவில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்

Published by
லீனா

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். குழந்தையின் உடலை மீட்க நான்கு நாட்களாக போராடிய நிலையில், இவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது.
5-வது நாள் அதிகாலையில் குழந்தையை சடலமாக தான் மீட்டெடுத்தார்கள். குழந்தை மீண்டு வருவான் என்ற எதிர்பார்த்தவர்கள் அனைவரும் இன்று, கடவுளிடம் சென்று வா குழந்தாய்! என கூறும் நிலைக்கு தள்ளபட்டுள்ளனர்.
குழந்தையை மீட்கும் பணி நடைபெறும் இடத்தில் அமைச்சர் விஜய் பாஸ்கரும் உடனிருந்து, எப்படியாவது குழந்தையை மீட்டு விட வேண்டும் என போராடினர். ஆனால், யாருடைய முயற்சியும் வெற்றி பெறாத நிலையில், குழந்தை சுஜித் மரணம் குறித்து அமைச்சர் விஜய் பாஸ்கர் அவர்கள் பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், ‘ மனதை தேற்றிக் கொள்கிறேன். ஏனென்றால், இனி நீ கடவுளின் குழந்தை. கருவறை இருட்டு போல் இருப்பாய் என நினைத்தோம். கல்லறை இருட்டாய் மாறுமென நினைக்கவில்லை. எப்படியும் வந்துவிடுவாய் என்றுதான், ஊனின்றி, உறக்கமின்றி இரவுப்பகலாய் இமை மூடாமல் உழைத்தோம். இப்படி என்னை புலம்பி அழ விடுவாய் என எண்ணவில்லை.’ என்று உருக்கமாக பேசியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

4 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

12 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago