நாங்கள் நம்பும் கடவுள் ராமர் வாழ்ந்த காலத்தில் எழுப்பப்பட்ட பாலம் அது. அதற்கு சேதாரமில்லாமல் செய்தால் நாங்கள் வரவேற்கிறோம். அப்படி செய்தால் முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறேன். – பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்.
இன்று தமிழக சட்டபேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ராமேஸ்வரம் கடல் பகுதியில் சேது சமுத்திரம் திட்டம் நிறைவேற்றப்படுவது குறித்த தீர்மானத்தை கொண்டு வந்தார். இதன் மீதான விவாதங்கள் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தின் போது, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசுகையில், மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் ராமேஸ்வரம் முதல் மண்டபம் வரையில் எந்த இடத்தில் கட்டுமானம் கட்ட முடியும் என தெரியவில்லை என்று தான் குறிப்பிட்டார். உறுதியாக முடியாது என்று சொல்லி இருக்காரா என தெரியவில்லை.
சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால், உங்களை விட சந்தோச படுவது தென் தமிழகத்தை சேர்ந்த நாங்கள் சந்தோசப்படுவோம். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டியுள்ளார்.
முதல்வர் தீர்மானம் குறிபிட்ட பகுதி கடல் ஆழமில்லா பகுதி. அங்கு மண் எடுக்க எடுக்க நீரோட்டம் வந்து மண் நிரம்பி கொண்டே இருக்கும். மேலும் நாங்கள் நம்பும் கடவுள் ராமர் வாழ்ந்த காலத்தில் எழுப்பப்பட்ட பாலம் அது. அதற்கு சேதாரமில்லாமல் செய்தால் நாங்கள் வரவேற்கிறோம். அப்படி செய்தால் முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறேன். என தெரிவித்தார் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்.
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு…
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அந்த…
சென்னை : 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…
சென்னை : விக்கிரவாண்டியில் அக். 27ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஒரு சில பிரபலங்கள் விரும்பினாலும், ஒரு சில பிரபலங்கள் அதனை அலர்ஜியாகவே…