உலகத்திலிருந்து செல்பவர்களை மரியாதையுடன் அனுப்பி வைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றானது, தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. இந்த வைரஸ் தொற்று தற்போது இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோரை பாதித்துள்ள நிலையில், தற்போது இந்த வைரஸ் நோயானது தமிழகத்திலும், 1,400-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்த நோயினால், பல சாதாரண மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், மக்களுக்கு மருத்துவம் பார்க்கும், மருத்துவர்கள் கூட இந்த நோயாளிகளுக்காக மருத்துவம் பார்த்து, தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர். கொரோனாவால் உயிரிழப்பவர்களை, சக மனிதர்களாகிய நாம், அவர்களை தகுந்த மரியாதையுடன் அனுப்பி வைப்பது ஒவ்வொருவரின் கடமை. அந்த வகையில், சென்னையை சேர்ந்த 2 மருத்துவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ள நிலையில், அவர்கள் தக்க மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவில்லை.
இந்நிலையில், கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களில் இருந்து எந்தவொரு நோய்ப்பரவல் ஏற்படாது. மக்கள் அச்சப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவால் சிலர் இவ்வுலகை விட்டு விடைபெற்று செல்வதென்பது மிகவும் துரதிஷ்டவசமானது. கொரோனா தொற்று நோயால் சில நல்ல மனிதர்கள் நம்மை இழக்க நேரிடுவது கடினமான ஒரு நிகழ்வு, சக மனிதர்களாகிய நாம் அவர்களை தகுந்த மரியாதையுடன் அனுப்பி வைப்பது ஒவ்வொருவரின் கடமை. கொரோனாவால் இறக்கும் நபர்களுக்கு தகனம் , அடக்கம், செய்ய உலக சுகாதார வழிகாட்டுதல் பின்பற்றுகிறோம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…