தமிழகத்தில் ஒருவர் கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இது குறித்து தற்பொழுது காணொலி காட்சி மூலமாக பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள், ஒரு வாரம் தமிழகத்தில் போடப்பட்டுள்ள முழு ஊரடங்கால் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருவதாக கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் ஒருவர் கூட பசியால் வாடவில்லை எனும் நிலையை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், நாளை முதல்வர் கோவை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், தனக்கு வரவேற்பு பதாகைகள் வைப்பதை விடுத்து பசியால் வாடுபவர்களுக்கு பசி போக்கும் உன்னத பணியில் ஈடுபட வேண்டும் எனவும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளான கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உணவு வழங்க கூடிய பணியை மேற்கொள்ள வேண்டுமெனவும் திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இது குறித்து முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது…
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…
சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…
சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார்.…