கர்நாடகாவுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் நம் ஒற்றுமையை உணர்த்த வேண்டும் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

மேகதாது அணை கட்டப்பட்டால் நமது விவசாயிகளின் நிலை மோசமானதாக மாறும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரை.

கர்நாடக மேகதாது அணை தொடர்பாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் ஒருமனதாக 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனிடையே, இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும், காவிரி பிரச்சனையில் அனைவருக்கும் ஒன்றுபட்ட கருத்துதான் இருக்கும். காவிரி என்பது கர்நாடகாவுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கும் முழு உரிமை கொண்டது.

கர்நாடகாவை விட தமிழ்நாட்டில் தான் அதிகமான நீளத்துக்கு காவிரி பாய்கிறது. தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும். நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதை கர்நாடகாவுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் உணர்த்த வேண்டும் என்றும் மேகதாதுவில் அணை கட்டும் அனைத்து முயற்சிகளையும் நாம் தடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை கட்டப்பட்டால் நமது விவசாயிகளின் நிலை மோசமானதாக மாறும். காவிரியில் தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு குறையும். ஏற்கனவே, தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரை கர்நாடகா வழங்கவில்லை. இந்த சூழலில் அணை கட்டப்பட்டால் எஞ்சிய நீரை மட்டுமே வழங்கும். அணையால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இல்லை என கர்நாடகம் கூறுவதில் துளி அளவும் உண்மை இல்லை.

விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதாலேயே அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. மேகதாது அணை கட்டப்பட்டால் எப்படி தண்ணீர் வரும் என்பதே நமது கேள்வி குறியாகிவிடும். கர்நாடகாவில் இருந்து நமக்கு கிடைத்துவரும் நீர் இந்த புதிய அணையில் தேக்கிவைக்கப்படும் என்றும் வாழ்வாதாரம் பிரச்சனையில் தமிழ்நாடு ஒரே சிந்தனையில் நின்றது என்பதை காட்ட வேண்டும் எனவும் முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago