இலங்கை மக்கள் அனைவருக்கும் உதவ வேண்டும் – தமிழ் தேசிய கூட்டமைப்பு

Default Image

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி சுமந்திரன் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அனைத்து இலங்கை மக்களுக்கும் உதவ வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள். 

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வலியுறுத்தியுள்ளார். அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தமிழக அரசு தயாராக உள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் நிவாரண பொருட்களை விநியோகிக்க அனுமதி வழங்கவும் வலியுறுத்தி இருந்தார். இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி சுமந்திரன் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அனைத்து இலங்கை மக்களுக்கும் உதவ வேண்டும் என்றும், அனைத்து மக்களும் ஒன்று படும் வேளையில் தமிழர்களுக்கு மட்டும் உதவி வழங்குவது பிரிவினையை ஏற்படுத்தி விடும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்