ஜெயலலிதாவின் கனவை தினகரனும் நிறைவேற்றுவார் என சிடி ரவி கூறியது அமமுகவுக்கு பாஜக சூசகமாக அழைப்பு விடுப்பதாக கேள்வி எழுந்துள்ளது.
சென்னை தியாகராய நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, சசிகலாவின் முடிவை பாஜக வரவேற்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவை அதிமுக – பாஜக கூட்டணி நிறைவேற்றும். அம்மாவின் ஆட்சி மலர வேண்டும் என்பதற்காகத்தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். இதற்காக தான் தொடர்ந்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் கனவு ஒருங்கிணைந்த அதிமுகத்தான் என்றும் ஜெயலலிதாவின் கனவை தினகரனும் நிறைவேற்றுவார் என நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக வாக்குகளை பிரிப்பாரா என்ற கேள்விக்கு இன்னும் காலம் இருக்கிறது என்று சிடி ரவி குறிப்பிட்டுள்ளார். இதன்படி அதிமுக – பாஜக கூட்டணிக்கு அமமுகவிற்கு பாஜக சூசகமாக அழைப்பு விடுகிறதா என்று கேள்வியும் எழுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…
சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை…
சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …
சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…
நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…
சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…