பன்னீர்செல்வத்தின் தம்பி என்று கூட பாராமல் நடவடிக்கை எடுத்துள்ளோம்..!அமைச்சர் ஜெயக்குமார்
அண்ணனாக இருந்தாலும் தம்பியாக இருந்தாலும் கட்சிக்கு எதிராக செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், கட்சியில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும், இது ஒரு நல்ல விஷயம். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் தம்பி என்று கூட பாராமல் நடவடிக்கை எடுத்துள்ளோம்.அண்ணனாக இருந்தாலும் தம்பியாக இருந்தாலும் கட்சிக்கு எதிராக செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.