சட்டப்பேரவையில் நாளை ஆளுநர் உரை இருப்பதால் அதுதொடர்பாக ஆலோசனை நடத்தினோம்…! திமுக பொருளாளர்  துரைமுருகன்

Default Image

சட்டப்பேரவையில் நாளை ஆளுநர் உரை இருப்பதால் அதுதொடர்பாக ஆலோசனை நடத்தினோம் என்று திமுக பொருளாளர்  துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல், ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் என்றும் ஜனவரி 10ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில்,திருவாரூர் இடைத்ததேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை 3ம் தேதி மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் . 4-ம் தேதி மாலை 5 மணிக்கு வேட்பாளர் நேர்காணல் நடைபெறும். வேட்பாளருக்கான விண்ணப்ப கட்டணம் ரூ. 25 ஆயிரம் என்றும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.

திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக, சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார் .ஆலோசனையில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ராசா, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்  சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் நடந்த ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது.இதன் பின் திமுக பொருளாளர்  துரைமுருகன்  கூறுகையில், சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனையில் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து ஆலோசித்தோம்.மு.க.ஸ்டாலின் போட்டியிடுவது குறித்து பேசவில்லை. சட்டப்பேரவையில் நாளை ஆளுநர் உரை இருப்பதால் அதுதொடர்பாக ஆலோசனை நடத்தினோம் என்றும் திமுக பொருளாளர்  துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்