உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடாது என்று நாங்கள் வழக்கு போடவில்லை-ஸ்டாலின்

Default Image

திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  சுவர்ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது இந்திய நாட்டிற்கே அவனமானமானது. இந்த செயலை நான் கண்டிக்கிறேன். உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடாது என்று நாங்கள் வழக்கு போடவில்லை, அதை புரிந்துக்கொள்ளுங்கள்.

ப.சிதம்பரம் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும்.அனைத்துக்கட்சி சார்பில் நடைபெறும் போராட்டத்தில் அழைப்பை ஏற்று பங்கேற்ற கட்சிகளுக்கு நன்றி என்றும்  அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர் , அவருடைய கருத்துக்கெல்லாம் என்னால் பதில் கூற முடியாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்