மக்கள் நீதி மய்யத்தின் கொடியை ஏற்றவிடாமல் தடுத்த திண்டுக்கல் காவல்துறையைக் கண்டித்து மநீம ட்விட்.
மக்கள் நீதி மய்ய கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், ‘மக்கள் நீதி மய்யத்தின் கொடியை ஏற்றவிடாமல் தடுக்கும் திண்டுக்கல் காவல்துறையைக் கண்டிக்கிறோம். திண்டுக்கல் மாநகராட்சி பொன்னகரம் பகுதியில் ஏற்கனவே நடப்பட்ட மக்கள் நீதி மய்யக் கொடிக்கம்பமானது அந்தப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தோண்டும் பணிக்காக அகற்றப்பட்டது.
தற்போது அந்தப் பணி முடிந்து, இன்று மநீம மாநிலச் செயலாளர் அவர்களின் தலைமையில் அந்தக் கொடிக் கம்பத்தை மீண்டும் அந்தப் பகுதியில் அமைக்கப் போகும்போது காவல் துறையினர் அதைத் தடுக்கின்றனர். அருகிலேயே பிற கட்சிகளின் கொடிக் கம்பங்கள் இருக்கும்போது,
மய்யத்தின் கொடியை மட்டும் ஏற்றவிடாமல் தடுப்பது ஏன்? மய்யத்தின் கொடியை ஏற்றாமல் நகரமாட்டோம் என்று திண்டுக்கல் மாவட்ட மய்ய நிர்வாகிகள் காவல்துறையிடம் தெளிவுபடச் சொல்லிவிட்டனர்.
ஆளுங்கட்சி,பிஜேபிக்கு அனுமதி பிற கட்சிகளுக்கு அனுமதி மறுப்பு என்ற திண்டுக்கல் காவல்துறையின் மாற்றாந்தாய் மனப்போக்கை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது!’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…