அரியர் பசங்க நாங்க…! எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கே…!

Default Image

எடப்பாடியார், அரியர் பசங்க நாங்க, எங்கள் ஒட்டு இரட்டை இலைக்கே’ என எழுதியிருந்த பாதகைகளுடன் நின்ற இளைஞர்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாகை மாவட்டம், திருத்துறைபூண்டியில் பிரச்சாரத்தை தொடங்கினார். வேதாரண்யம், நாகை, பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி, காட்டுமன்னார்கோவில் மற்றும் சிதம்பரம் தொகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில், நாகை நகரின் முக்கிய வீதிகளில் கொளுத்தும் வெயிலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஒரு கட்டடத்தின் மொட்டைமாடியில் ஆரவாரத்துடன் சத்தம் கேட்டது. இதனை அடுத்து சத்தம் வந்த திசை நோக்கி பார்வையை திருப்பினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அங்கு 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாதகைகளுடன் நின்றுள்ளார்.

அவர்கள் வைத்திருந்த பதாகைகளில், ‘எடப்பாடியார், அரியர் பசங்க நாங்க, எங்கள் ஒட்டு இரட்டை இலைக்கே’ என எழுதியிருந்தது. இதனை பார்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாய்விட்டு சிரித்தார். அரியர் அச்சத்தில் மூழ்கி இருந்த இளைஞர்களின் வயிற்றில் பால் வார்த்த முதல்வருக்கு, இளைஞர்கள் வித்தியாசமான முறையில் நன்றி தெரிவித்து, வரவேற்பளித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts