பணக்காரர்களுக்காகவே பாஜக ஆட்சி நடத்தி வருகிறது என திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். இபிஎஸ், ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் சொத்துப் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும். பணக்காரர்களுக்காகவே பாஜக ஆட்சி நடத்தி வருகிறது என என்றார்.
இதன்பின் பேசிய அவர், மீண்டும் முதலமைச்சராவேன் என எடப்பாடி பழனிசாமி சொன்னால்தான் அவருடன் உள்ளவர்கள் இருப்பார்கள், இல்லையெனில் ஓ.பன்னீர்செல்வத்திடம் சென்று விடுவார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு எந்த சட்டமும் தெரியாது என்று நினைக்கிறேன். எஸ்.ஆர் பொம்மை வழக்கிற்கு பிறகு எந்த சட்டமன்றமும் கலைக்கப்படவில்லை. இபிஎஸ் தன்னிடம் உள்ளவர்களை தக்க வைத்துக்கொள்ள ஏதோ ஏதோ பேசி வருகிறார்.
நாங்களே ஆட்சியைக் கலைத்தால்தான் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரும். அடுத்தாண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் வருகிறது என்றால் தற்போது எதற்கு கர்நாடகாவில் தேர்தல்? என கேள்வி எழுப்பியுள்ளார். எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை என கூறிய அவர், இன்று நடைபெறுவது அரசியல் மாநாடல்ல சமூக நீதிக்கான மாநாடு என தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…