நேற்று நடந்த சட்டசபையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பேசினார்.அவர் பேசுகையில், மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது, ஈழ தமிழர்களுக்கு, இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார் .குடியுரிமை சட்ட திருத்தத்தால் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு, எந்த பாதிப்பும் ஏற்படாது . அதேபோன்று என்.ஆர்.சி சட்டத்தால், தமிழகத்தில் ஒரு இஸ்லாமியருக்கு பாதிப்பு ஏற்பட்டால் கூட, அவர்களை பாதுகாக்கும் கொடுக்கும் முதல் குரலாக அதிமுக தான் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில் ,ஆர்பி உதயகுமார் ஒன்றுக்கும் உதவாத குமார். அவருக்கு விஷயம் தெரியவில்லை. நாங்கள் ஆட்சியில் இருந்த போது இந்த சட்ட திருத்தமே கொண்டு வரப்படவில்லை.
குடியுரிமை சட்டத்துக்கு நாங்கள் எதிர்ப்பு அல்ல. அந்த திருத்ததுக்கு மட்டும் தான் எதிர்ப்பு என்று கூறினார். ஜெயின், பௌத்தம், கிறிஸ்தவர், பார்சியரோடு சேர்த்து இஸ்லாமியர் மற்றும் இலங்கை தமிழரையும் சட்ட திருத்தத்தில் சேர்க்க வேண்டும் என்கிறோம் .அது அவருக்கு புரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…