அதிமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Default Image

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்தார். அவர், கட்டுமானம் மற்றும் ஆக்சிஜன் கிடங்கு ஆகியவற்றை பார்வையிட்டார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கடந்த ஆட்சியில் சுகாதாரத் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தவறுகள் நடந்திருந்தால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். அதன் அடிப்படையில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆய்விற்கு பின் சட்ட ரீதியாக மட்டுமல்லாது, துறை ரீதியாகவும் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்