பாறைகள் கடினமாக இருப்பதால் இறுதி முடிவு எடுக்கவேண்டிய தருணத்தில் உள்ளோம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

Default Image

நடுக்காட்டுபட்டியில் சிறுவன் சுர்ஜித் வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் கடந்த 25-ம் தேதி மாலை 05.40 மணிக்கு தவறி விழுந்தான். அப்போது முதல் சிறுவனை மீட்கும் பணி 64 மணி நேரத்திற்கு மேலாக நடந்து வருகிறது.
பல முயற்சிகள் செய்தும் தோல்வியில் முடிந்த நிலையில் அதிகாரிகள் புதிய முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் சுர்ஜித் உள்ள ஆழ்துளை கிணறு அருகில் சுரங்கம் போன்ற குழி தோன்றும் பணியை ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஓஎன்ஜிசியின்  ரக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் குழி தோண்டும் போது பாறைகள் குறுக்கிடுவதால் தோண்டும் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது. குழி தோண்டும் பணியை விஜயபாஸ்கர் தொடக்கத்தில் பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று காலை  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், அவர் இரண்டாவது ரக் இயந்திரம் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
ஆனால் இயந்திரங்களாலும்  குறித்த படி பள்ளம் தோண்ட முடியவில்லை. மணப்பாறையில் பாறைகள் கடினமாக உள்ளது. இவ்வளவு கடினமான பாறைகள் இதுவரை நான் பார்த்ததில்லை குழந்தையின் மேல் ஒரு அங்குலத்திற்கு மண் விழுந்துள்ளது. இதனால் அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம். இதுகுறித்து துணை முதல்வர் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்படும் என கூறியுள்ளார்.
இது வரை இரண்டு ரக் இயந்திரம் மூலம்  40 அடி மட்டுமே குழி தோண்டப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்