பாஜக சார்பில் 1 லட்சம் இடங்களில் அதாவது அவரவர் வீட்டு வாசலில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாட திட்டமிட்டுள்ளோம் என அண்ணாமலை தெரிவித்தார்.
விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். அப்போது, தமிழக சட்டமன்றத்தில் தற்போது பாஜக சார்பில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அடுத்த கட்டமாக இந்த எண்ணிக்கை 150 ஆக உயரும். 2026 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது.
தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வழங்கும் என்று நம்புகிறோம். வரும் 10, 11, 12ம் தேதி பாஜக சார்பில் 1 லட்சம் இடங்களில் அதாவது அவரவர் வீட்டு வாசலில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாட திட்டமிட்டுள்ளோம்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளை பாஜக வெல்லும். தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவிற்கான இடம் உருவாகிவிட்டது. தமிழகத்தில் பாஜகவா..?திமுகவா..? என்கிற நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள் என தெரிவித்தார்.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…