தீர்ப்பை ஏற்கிறோம், ஆனால் விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல – அண்ணாமலை

Published by
பாலா கலியமூர்த்தி

திமுக வரலாற்றில் ஒரு தவறான முன் உதாரணத்தை எடுத்து வைத்துள்ளது என தமிழக பாஜக தலைவர் குற்றசாட்டு.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் குற்றவாளிகள் என்பதை மறுக்க முடியாது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் நிரபராதி என குறிப்பிடவில்லை. நிரபராதிகளை விடுதலை செய்தது போல், முதலமைச்சர் முக ஸ்டாலின் கொண்டாடி வருகிறார். உச்ச நீதிமன்றம் மிக நுணுக்கமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பை பாஜக ஏற்கிறது. ஆனால், சரித்திரத்தை மறக்க கூடாது, நம் மண்ணில் நடந்ததையும் நாம் மறக்க கூடாது. ராஜீவ் காந்தி, அவருடன் சேர்ந்து மனித வெடிகுண்டில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். இதில் குறிப்பாக 8 காவலர்கள் மற்றும் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் இஃபால், அவரது பிறந்தநாள் அன்றே இறந்துள்ளார் என தெரிவித்தார். எனவே, அப்போ அவர்களுக்கு நியாயம் நீதி இல்லையா என கேள்வி எழுப்பினார்.

பாஜகவின் நியாயம், நீதி என்பது குற்றவாளிகள் தான். உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மிக நுணுக்கமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் விடுதலை செய்யப்பட்டவர் கொண்டாடப்பட வேண்டியவர்கள் கிடையாது என குறிப்பிட்டார். தியாகிகள் போல் தமிழ்நாடு முழுவதும் எடுத்து சென்று ஒரு சாதனை செய்தது போல கொண்டாடுவதற்கு தமிழகத்தில் ஏராளமாக உள்ளது.

திமுக வரலாற்றில் ஒரு தவறான முன் உதாரணத்தை நேற்றில் இருந்து எடுத்து வைத்துள்ளது என தெரிவித்தார். கல்குவாரி உயிரிழப்பிற்கு திமுகவே காரணம். காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர் உரிமையாளர் என்பதால் அரசின் ஒத்துழைப்புடன் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு ஆளுமை இருந்தால், திமுகவுக்கு கொடுத்துள்ள ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

15 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

16 hours ago