தண்ணீருக்காக தவிக்கும் தமிழ்நாடு..! பள்ளிகளுக்கு விடுமுறையா..? என்ன சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகம் தண்ணீருக்காக தவித்து கொண்டிருக்கிறது.பொதிய மழை இல்லாத காரணத்தாலும்,அணைகளில் நீர் வற்றியதால் மக்கள் குடி தண்ணீருக்காக தவித்து வருகின்றனர்.
தலைநகரத்தில் தண்ணீருக்காக மக்கள் தங்களது அன்றாட வேலைகளை விட்டுவிட்டு தண்ணீர் பிடிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக 4000 ஓட்டல்கள் முடப்படுவதாக தகவல்கள் வெளியாக்கி உள்ளது.மேலும் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தண்ணீர் பிரச்னை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தகவல்கள் வெளியாகியது.இது குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தண்ணீர் பிரச்னை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக வெளியான செய்திகள் தவறு பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ஜூன் 17 முதல் ஆய்வுப்பணிகள் நடைபெறும் பள்ளிகளில் தண்ணீர் பிரச்னை குறித்து கவனத்திற்கு கொண்டுவந்தால் 24 மணி நேரத்தில் சரிசெய்யப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் இப்படி தண்ணீர் இன்றி தவிப்பது வேதனை அளிக்கின்றது.’நீரின்றி அமையாது உலகு’ என்ற அய்யனின் குறள் இன்று மெய்யாகி விட்டது.அணைகள்,குளங்கள் , ஏரிகளை பாதுகாக்காமல் பறிகொடுத்து விட்ட அரசால் இன்று மக்கள் வேதனைப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.