கர்நாடகாவில் 19-ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீரானது மூன்று நாட்களுக்கு பிறகு தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது.
தமிழகத்திலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வந்ததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயரவும், குறைவதுமாக இருந்து வந்தது. தற்போது கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் கபினி அணைக்கான நீர்வரத்து வேகமாக வருகிறது. கடந்த 19-ஆம் தேதி தமிழகத்திற்கு கபினியில் இருந்து 4,104 கன அடியும், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 2,300 கன அடியும் மொத்த 6,404 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், 19-ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீரானது மூன்று நாட்களுக்கு பிறகு தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது. காலை நிலவரப்படி வினாடிக்கு 5,000 கனஅடி நீர்வரத்து உள்ளது. இந்த தண்ணீர் நாளை மேட்டூர் அணையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…