தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் …!முதலமைச்சர் பழனிசாமி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை…!

Default Image

தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமிஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப்பட போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.இதனால் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கேன் வாட்டர் உற்பத்தி நேற்று மாலை முதல் நிறுத்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நிலத்தடி நீரை எடுக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை எதிர்த்து முடிவு செய்தனர்.
Image result for தண்ணீர் லாரிகள்
இந்நிலையில் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக், கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதேபோல் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகவே வணிக வளாகம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. பராமரிப்புப் பணிக்காக இன்று மூடப்படுவதாக ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.அதேபோல் சென்னை புறநகர் பகுதிகளில் தண்ணீர் லாரி வேலை நிறுத்தத்தால் டீ கடை, ஹோட்டல்கள் என அனைத்து வணிக நிறுவனங்களும் பெரிய அளவில் பாதிப்படைந்து வருவதாக வணிகர்கள் சங்க நிர்வாகிகள் வேதனை தெரிவித்தனர்.
இந்நிலையில் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமிஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை ஈடுபட்டுள்ளார்.சென்னையில்  கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் வீட்டில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்