தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விக்டோரியா கல்லூரியில் உள்ள மாணவர் கல்லூரி விடுதி கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றப்பட்டு வரும் நிலையில், அங்கு ஆய்வுகளை மேற்கொண்டபின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது பேசிய அவர், கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளதாக கூறினார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என எச்சரித்த அவர், சென்னையில் மொத்தமாக 18,852 படுக்கைகள் உள்ளதாக கூறினார்.
இந்திய பாதிப்பில் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு 3% ஆக உள்ளதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி, சென்னையில் உள்ள விக்டோரியா கல்லூரியில் உள்ள மாணவர் கல்லூரி விடுதியில் 570 படுக்கைகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…