எச்சரிக்கை : அடுத்த 6 மணி நேரத்திற்கு இந்த 4 மாவட்டங்களிலும் மணிக்கு 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும்…!

Default Image

அடுத்த 6 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் மணிக்கு 45 கி.மீ வேகத்தில் காற்று வீசுக்கூடும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் பெய்த கனமழை காரணமாக அங்காங்கு வெள்ளநீர் தேங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் அடுத்த ஆறு மணி நேரத்திற்கு மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், காற்றின் வேகம் அதிகரித்துள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்